Friday 12 June 2015

பெங்களூரில் ஒரு மழை காலம்

அக்டோபர் 2014:

எனது திருமணத்திற்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில் மாத இறுதியில் வந்த weekend இல் நானும் விவேகக்கும் bachelor பார்ட்டியை கொண்டாடின பதிவு இது.

அக்டோபர் 24ம் தேதி வெள்ளிகிழமை ஒரு மழை இரவு ,9.30 மணி அளவில் விவேக் பெங்களூர் வந்தான்  வழக்கம்போல் GEE PEE travels வந்து இறங்கியுடன் நான் பொம்மநஹள்ளியில் அவனுக்காக காத்திருந்தேன். அவன் வண்டியில் இருந்து இறங்கியுடன் நேராக அருகில் உள்ள பிரியாணி கடைக்கு அழைத்து சென்று அவனக்கு பிடித்த starters & பிரியாணியை வாங்கி கொண்டோம். நான் முன்பே நண்பர்களுக்கு பார்ட்டி வைப்பதற்காக வாங்கிவைத்திருந்த BLENDERS PRIDE வீட்டில் இருந்ததால் வெளியில் எதுவும் வாங்கவில்லை.


வழக்கம்போல் நாங்கள் எங்கள் ரூம்மில் வைத்து ஸ்டார்ட் செய்தோம். இரவு 2.00 மணிவரை நாங்கள் இருவரும் பேசினோம் பேசினோம் பேசினோம்.... பேசிக்கொண்டே இருந்தோம். எப்போது தூங்கினோம் என்று தெரிய(வாய்பே)வில்லை !!!
மறுநாள் நான் சீக்கிரமாக எந்திரித்து விட விவேக் மிகநிதானமாக ஒரு 1.30 மணி அளவில் !!! கண்விழித்தான். பெங்களூர் வேறு நல்ல வானிலை. நேற்று அடித்த மழை மற்றும் whisky இரண்டும் சேர்ந்து அவனை தாலாட்டி இருக்கலாம்... 

அன்று கோயம்புத்தூரிலிருந்து எனது தங்கையும் குழந்தைகளும் திருமணத்திற்கு வந்திருந்தனர். அவர்களை ரயில்வே ஸ்டேஷனில்  வரவேற்க நாங்கள் பைக்கை எடுத்து கொண்டு சென்றோம். அவர்களை 
ஆட்டோவில் ஏற்றி அனுப்பிவிட்டு அடுத்து என்ன செய்யலாம் என நினைக்கையில் மழை மறுபடியும் ஆரம்பமானது.அதன் பிறகு நடந்தது எல்லாமே எங்கள் வாழ்கையில் நடந்த மிக மிக மகிழ்ச்சியான தருணங்கள். அதை பற்றிய ஒரு பதிவே இது...

இந்த பதிவை எழுதும்போதே மனதில் ஒரு உற்சாகம் வந்துவிடும்.மிதமான மழை, குளிர்ந்த காற்று அற்புதமான வானிலை மனதுக்கு பிடித்த நபருடன் பைக் பயணம் என எல்லா விகிதத்திலும் கலந்த ஒரு பரவச நிலை. அன்று பிடித்த மழையில் நாங்கள் இருவரும் அங்கு இருக்கும் ஆட்டோ கவுன்ட்டரில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்யலாம் என யோசித்தோம். பிறகு கொஞ்சம் மழை விட்டதும் பைக்கை எடுத்து கொண்டு இந்திராநகர் சென்று ஐஸ்வர்யாவை பார்த்து விட்டு செல்லலாமென முடிவு செய்து மழையில் நனைந்து கொண்டே சென்றோம். கப்பன் பார்கை தாண்டும் போது மழை அதிகமானது. வேறு வழியில்லாமல் பைக்கை அங்குள்ள பார்க்கில் நிறுத்தினோம். 




ஒதுங்குவதற்கு அங்கு ஒரே ஒரு ஷெல்ட்டர் இருந்தது. அது அங்குள்ள செக்யூரிட்டி உட்காரும் மிக சிறிய டப்பா. அங்கு நாங்கள் இருவரும் உள்ளே போய் நின்றோம்.(கிழே படத்தை பார்க்க)மழை விடுவதாக இல்லை. மேலும் மேலும் வலுவானது.அந்த சிறிய ஷெல்டெரில்  இருவரும் மழையை ரசித்துக்கொண்டு கமெண்ட்ஸ் பாஸ் பண்ணிக்கொண்டு இருந்தோம். அடாத மழையிலும் மொபைலில் photos  எடுத்துக்கொண்டு அந்த இயற்கையை ரசித்துகொண்டே அடுத்து என்ன செய்யலாம் எங்கு போகலாம் என்ற யோசனையே எங்களுக்கு இல்லை. அந்த சூழ்நிலையிலேயே இருக்க விரும்பினோம். பிறகு 1 மணி நேரத்திற்கு பிறகு மழை விட்டதும் பைக்கை எடுத்துக்கொண்டு இந்திராநகர் சென்றோம். அங்கு ஐஸ்வர்யாவை பார்த்துவிட்டு மழையில் நனைந்து கொண்டே இரவு வீடு வந்தோம். வந்த சிறிது நேரத்தில் மீண்டும் vijaya layout சென்று அங்குள்ள ரெகுலர் பாரில் உடகார்ந்து கொண்டு வோட்கா fuel வங்கி கொண்டு நிதானமாக சரக்கடிதோம். எவ்வளவு நேரம் பேசிக்கொண்டே அடித்தோம் என்பது நினைவில் இல்லை. எங்களுக்கு எந்தவித டார்கெட்ம் இல்லை. எங்களின் ஒரு சில சந்தோஷங்களில் இதுவும் ஒன்று. ஆனால் முக்கியமானதும் கூட !!. இரவு 11.30 மணி அளவில் பார் மூடப்படும் நேரத்தில் சர்வர் வந்து "சார் பார்யை மூட வேண்டும் என்று சொன்ன பிறகுதான் நாங்கள் வெளியிலே வந்தோம் ". அவ்வளவு நேரம் போனதே தெரியாமல் பேசிக்கொண்டே குடித்தோம். ஒரு வழியாக பில்லை செட்டில் செய்து வெளியில் வந்தால் நான் ரொம்ப நேரமாக எதிர்பார்த்து காத்துகொண்டிருந்த தருணம் வந்தது.
"விவேக் அப்போது தனக்கு பிரியாணி இப்பொழுதே வேண்டும் சகோதரா"
(அவன் ஒரு பிரியாணி ரசிகன் . பிரியாணியை பற்றி பேசினாலே உடனே சாப்பிடவேண்டும் என்பான். அதை பற்றி நான் மிக பெரிய பதிவே எழுத வேண்டும். )

சரி என்று நாங்கள் இருவரும் பைக்கை எடுத்து கொண்டு மெயின் ரோடுக்கு சென்றோம். அங்குள்ள SEASON அரபியன் restaurant இல் சென்றோம். நாங்கள் சென்ற பொது அவன் கடையை மூடும் நேரம். நாங்கள் நேராக உள்ளே சென்று பிரியாணி ஆர்டர் செய்தோம். அது பக்கா  அரபியன் ஸ்டைல் உணவகம். நாங்கள் இருந்த மப்பில் வந்த பிரியாணியை ஒருகை பார்த்தோம் 
எப்போது சாப்பிட்டோம் எப்படி வீட்டிற்கு வந்தோம் என்று எதுவுமே எங்களுக்கு தெரியாது. இவ்வாறாக அன்றைய நாளை மிக மிக மகிழ்ச்சியாக கழித்தோம்.

இந்த பதிவை நான் ரசித்து எழுதிய காரணம் என்று பார்த்தால் ஒன்றே ஒன்று தான். வாழ்வில் நடைபெற்ற எதிர்பாராத தருணங்கள் நம் நினைவில் பசுமையாக நிலைத்திருக்க வேண்டும் என்பதுதான். இதை விட அருமையான தருணங்கள் உள்ளன (எ.கா: திருமணம் ....) ஆனால் அதெலாம் பிளான் செய்து நடந்து பதிவு செய்யப்பட்டது . இது போன்ற தருணங்களை பிற்காலத்தில் படிக்கும் போது ஒரு வித சந்தோஷமும் பின்னோக்கிய நினைவுகளும் நம்  மனதில் இருக்கும். எனது டைரி குறிப்பில் இருந்து இதை electronic வடிவில் பதிவேற்றுவது ஒரு வகையில் அழியாமல் இருக்கும் என நம்புகிறேன்


விக்னேஷ்.S 




























Thursday 11 June 2015

ஏலகிரி 2015

இன்று  எனக்கும் சங்கர்  கணேஷ் க்கும் HOSUR இல்  interview இருந்தது . நான் என்னுடைய  யமஹா பைக்கில் கிளம்பி சுமார் 10 மணி அளவில் அங்கு சென்றோம் .போனஉடனே தெரிந்தது இது வெறும் கண்துடைப்புக்காக நடத்தப்படும் நேர்காணல் என்று . சரி அங்கிருந்து  ஏலகிரி மலைக்கு செல்லலாமென  முடிவு செய்து சுமார் 12.45 அளவில் கிளம்பினோம். சங்கர் பைக்கை ஓட்டினான் . சென்னை பெங்களூர் நெடுஞ்சாலையில் 110KM  தொலைவில் ஏலகிரி அமைந்துள்ளது.
highwayயில்  உள்ள பெட்ரோல் பங்கில் 500 க்கு பெட்ரோல் போட்டுவிட்டு கிளம்பினோம். மணிக்கு 90KM  வேகத்தில்  சென்றோம். சரியாக 2.00 மணிக்கு கிருஷ்ணகிரி வாணியம்பாடி highwaysஇல்  ஒரு சின்ன பிரேக், அப்புறம் 2.45 மணிக்கு ஏலகிரி மலை அடிவாரதிற்கு வந்தோம். இந்த ஏலகிரி மலை வழி சாலை ஆனது நாம் highways வரும் போதே பார்க்கலாம். மொத்தம் 16 கொண்டை ஊசி வளைவுகள்.மெதுவாக 

  மலை மீது ஏற தொடங்கினோம். 5 கொண்டை ஊசி வளைவுகள் தாண்டியதுமே எங்களுக்கு முன்னாடியும்  பின்னாடியும் பைக்ல் FIGUREஐ வைத்து கொண்டு ROYAL ENFIELD ல் மூன்று பேர் வந்தனர். இவர்களை போல் நிறைய ஜோடிகளை வழிஎங்கும் காண முடிந்தது. கொடுத்து வச்சவங்க. அந்த மலைலேயே professional டிரஸ்ல shoeவோட மொட்ட பசங்களா வந்தது அந்த districtலயே நாங்க தான் !!.
16 கொண்டை ஊசி வளைவுகளையும் தாண்டுன உடனே  climate change . அப்படியே பெங்களூர் climate. ஊரும் நல்ல பசுமையாக  இருந்தது.
போன உடன் நல்ல பசி. அங்க இருக்குற ஒரு சின்ன ஹோட்டல்ல  ஒரு மீன்வாங்கி சாப்டோம். அப்புறமா அங்க ட்ரெக்கிங் செய்வதற்கு  ஒரு ஏரியா இருக்கிறது  என  வண்டிய கிளப்பி கொண்டு சென்றோம்
பெரிதாக ஒன்றும்   இல்ல. அப்படியே மறுபடியும் circleகே வாபஸ் வந்தோம். அங்க இருக்குறதே ஒரு children s பார்க், சின்ன ஏரி (செயற்கை) அப்புறம் natural ஏரி. அஷடே!!பிறகு அங்கிருந்து 5.00 மணி அளவில் கிளம்பி 7.30 மணிக்கு பெங்களூர் வந்தோம். ஏலகிரி மலை ஆனது வேலூர் & ஆம்பூர் மக்கள்காண சிறிய மலைவாச்தலம். சுற்றி பார்பதற்கு அங்கு ஒன்னும் இல்லை. பெங்களூர்ஐ சுற்றியே  நிறைய இடம் இருக்கிறது. இங்கிருந்து கிளம்பி ஏலகிரி போக வேண்டும் என நிர்பந்தம் இல்லை.

Monday 8 June 2015

Trip to Chennai June 2015

June 2015:


நீண்ட நாட்களாக பிளான் செய்து இந்த வாரம் தான் சென்னை செல்லும் வாய்பு  கிட்டியது .அதுவும் விவேக்கின் கல்யாணத்திற்கு பிறகு நான் செல்வதால் ஒரு வித எதிர்பார்ப்புடன் சென்றேன். ஜூன் 5 ஆம் தேதி பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ல் கிளம்பி அவனுக்கு பிடித்த சரக்கை வாங்கி கொண்டு ஒரு வித பயத்துடனே ரயில் ஏறினேன் . பயணம் மிக  சுமாராகவே இருந்தது. எப்பட சென்னை வரும் என வெயிட் செய்து ஒரு valiyaha சென்னை வந்து சேர்த்தேன் 

thiruvanmyur இருந்து vivek என்னை கூட்டி கொண்டு சென்றான்.பாலவாக்கத்தில் கடற்கரை ஒட்டி அவன் வீடு இருந்தது. நல்ல பெரிய வீடு.பார்த்த மாத்திரத்தில் எனக்கு ரொம்ப  பிடித்து இருந்தது . பையன் நல்லாவே வச்சு இருக்கான்.
கணேஷ் பாவா வேறு வந்திருந்தர். அவரை நான் எதிர்பார்கவில்லை. ஆரம்பத்தில் எனக்கு கொஞ்சம் ஏமாற்றம் இருந்தது அப்புறம் கொஞ்சம் சரக்கு அடிச்சா சரியாய் போய்டும்னு விட்டுட்டேன் .

இரவு 10.30 மணி அளவில் எங்களோட கச்சேரிய ஆரம்பிச்சோம்.  ஹரியாலி கபாப் சைடு டிஷு அப்புறம் தோசை வெங்காய சட்னி  உடன் dinner. மேனகா நல்ல சமைச்சு  இருந்தாங்க . பொடி  தோசைக்கும் கார சட்னிக்கும் செம்ம combination . ஒரு விழுது எடுத்து வாயில வச்ச வாவ் divine . நிஜமாவே பொடி தோசை, முட்டை தோசைனு  வித விதமா செஞ்சாங்க. இவ்ளோ பொறுமையா ராத்திரி 12 மணிக்கு மேல பண்ணனும்னா   really ஒரு சஹிப்பு தன்மையும் பொறுமையும் வேணும் . அது அவங்க கிட்ட நெறையவே இருக்கு. விவேக் நிஜமா ரொம்ப கொடுத்து வச்சவன்.  எல்லாத்துக்கும் மேல ஒரு நல்ல புரிதல் இல்லனா இது  சத்தியமா சாத்தியம் இல்ல .. bro am very happy to you both .

என்னதான் அன்னிக்கு நல்லா சரக்கு அடிச்சாலும் என்னால விவேக் கூட  வழக்கமா  ப்ரீ யா பேசுற அந்த wave length வரல. பாவா இருந்ததால கொஞ்சம் அடக்கியே இருந்தேன். ஒரு வழியா அன்னிக்கு ஒரு பூஜைய pothutu மட்டை ஆனோம்.

மறுநாள் சங்கீதாவும் பாவாவும் வெளியில கிளம்ப அன்னிக்கி நானும் விவேக்க்கும் மட்டும் நிதானமா எந்திருச்சு கறி வாங்கிட்டு வந்தோம் . என்னோட விருப்பபடி மேனகா சிக்கன் 65யும் குழம்பும் வச்சாங்க . அவங்க சமைக்கிற கேப்ல நாங்க ரெண்டு பெரும் கணேஷ் பாவாக்கு குலோப்ஜாமூன் பிடிக்கும்ன்னு (Oru பிட் ) சொல்லிட்டு வாங்க போனோம். பக்கதுல இருக்குற டாஸ்மாக் உள்ள போயிடு ஆளுக்கு ஒரு பீர் அடிச்சிட்டு போடாம வந்தோம்.
அடிச்சா வெயிலுக்கு பீர் வேற ரொம்ப சுகமா இருந்ததாலயும் நேத்து அடிச்சா சரக்கு வேற இன்னும் கண்ணு ஓரத்துல இருந்ததல உடனே கொஞ்சம் போதை அப்படியே மிதமான வானிலை மாதிரி மென்மையா இருந்த்துச்சு. அதோட விட்டோமா வீட்டு உள்ள வந்தஉடனே நேத்து ராத்திரி மிச்சம் இருந்த பிரிட்டிஷ் பிராந்தி ஒரு 90 கட்டிங் இருந்தது ஞாபகம் வந்துச்சு. அத ஆளுக்கு ஒரு சிப்னு  பாட்டில்லோட சேர்த்து அடிச்சுவிட்டோம். பயபுள்ள  ஒரேடியா தூக்கிருச்சு. அப்புறமா சுட சுட சிக்கன் குழம்பு 65 நு அமர்க்களமான  சமையல். BANANA LEAF ல சாப்பிடும் போது என்ன ஒரு சுகம். இந்த மாதிரி சாப்பாடு லாம் வெளியில எங்கேயும் கிடைக்காது (NONVEG ) மட்டும் . இதுல காமெடி என்னன்னா GANESH பாவாவும் சங்கீதாவும் NONVEG sapuduvanga . ஆனா அன்னிக்கு நாங்க samachadha சொல்லவே இல்ல.இப்படியே  குடி, குடி  னு நல்லா எஞ்சாய் பண்ணேன்.

மறுநாள் என்னக்கு கொஞ்சம் வயிறு சரியில்ல. மதியானம் பெங்களூர் கிளம்பலம்புனு decide பண்ணி ரெடி ஆனேன். விவேக், சங்கீதா family யா  வெளியில கிளம்புனாங்க. நான் திருவான்மியூர் ல இருக்குற அக்கா வீட்டுக்கு போய்ட்டு சாயங்காலமா நம்ம தல அஜித் சார் வீட்ட பாக்கலாம்னு  அவர் தெருக்கு போயிடு ராத்திரி KPN ல கிளம்பி பெங்களூர் வந்து சேர்ந்தேன்